×

சாலையில் மயங்கி விழுந்து லாரி ஓட்டுநர் பலி!

விருதுநகர் ராஜபாளையத்தில் சாலையில் நடந்து சென்ற லாரி ஓட்டுநர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் மாரிச்சாமி (47). இவர் சிவகாசியில் இருந்து ராஜபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலைக்கு இன்று லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்றார். பின்னர், ஆலையில் லாரியை நிறுத்திய மாரிச்சாமி, அருகில் உள்ள உணவகத்தில் சாப்பாடு வாங்கிகொண்டு, மீண்டும் லாரிக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவர் மயங்கி விழுந்தார்.
 

விருதுநகர்

ராஜபாளையத்தில் சாலையில் நடந்து சென்ற லாரி ஓட்டுநர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் மாரிச்சாமி (47). இவர் சிவகாசியில் இருந்து ராஜபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலைக்கு இன்று லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்றார். பின்னர், ஆலையில் லாரியை நிறுத்திய மாரிச்சாமி, அருகில் உள்ள உணவகத்தில் சாப்பாடு வாங்கிகொண்டு, மீண்டும் லாரிக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக மாரிச்சாமியை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாரிச்சாமி வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.