×

அருப்புக்கோட்டையில் பிரபல மருத்துவர் கொரோனாவுக்கு பலி!

விருதுநகர் அருப்புக்கோட்டையில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து வந்த மருத்துவர், கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்பத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் மருத்துவர் சாகுல்ஹமீது மன்சூர். இவர் அதே பகுதியில் மீரா மருத்துவமனை என்ற பெயரில் பல ஆண்டுகளாக மருத்துமனை நடத்தி வந்தார். தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் ஏழை, எளியவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் கட்டணம் வாங்காமல் இலவசமாக மருத்துவம் பார்த்து வந்தார். இந்த நிலையில்,
 

விருதுநகர்

அருப்புக்கோட்டையில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து வந்த மருத்துவர், கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்பத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் மருத்துவர் சாகுல்ஹமீது மன்சூர். இவர் அதே பகுதியில் மீரா மருத்துவமனை என்ற பெயரில் பல ஆண்டுகளாக மருத்துமனை நடத்தி வந்தார். தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் ஏழை, எளியவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் கட்டணம் வாங்காமல் இலவசமாக மருத்துவம் பார்த்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் மருத்துவர் சாகுல்ஹமீது மன்சூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 22 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் சாகுல்ஹமீது மன்சூர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, அவரது உடல் அருப்புக்கோட்டை முஸ்லீம் ஜமாத் மயானத்தில், கொரோனா விதிமுறையின் படி நல்லடக்கம் செய்யப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளித்து வந்த மருத்துவரின் மறைவு, அருப்புக்கோட்டை பகுதி மக்களிடைய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.