×

விளையாட்டின்போது தகராறு – 6 வயது சிறுவன் கிணற்றில் தள்ளி கொலை!

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் 6 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலைசெய்த, 15 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தடியன். இவரது மகன் பிரசாந்த் (6). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து திடீரென மாயமாகினார். இதனால் அவரது பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று அங்குள்ள கிணற்றில் பிரசாந்தின் காலணி மிதப்பத்தை
 

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் 6 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலைசெய்த, 15 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தடியன். இவரது மகன் பிரசாந்த் (6). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து திடீரென மாயமாகினார். இதனால் அவரது பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று அங்குள்ள கிணற்றில் பிரசாந்தின் காலணி மிதப்பத்தை கண்ட உறவினர்கள் கிருஷ்ணன்கோவில் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடியபோது, சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து தடியன் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சிறுவன் பிரசாந்த், அதே பகுதியை சேர்ந்த சுபா என்பவரது மகன் கோடீஸ்வரன்(15) உடன், தோப்பிற்கு சென்று விளையாடியது தெரியவந்தது. அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், கோடீஸ்வரன் பிரசாந்தை கிணற்றுக்குள் தள்ளி விட்டதில், சிறுவன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, தப்பியோடிய சிறுவன் கோடீஸ்வரனை தேடி வருகின்றனர்.