15 வயது சிறுமி கர்ப்பம் :போக்ஸோ சட்டத்தில் உறவினர் கைது
வேலூர் வேலூரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய உறவினரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர். வேலூர் வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(38). இவர் அதேபகுதியை சேர்ந்த தங்கை முறையிலான 15 வயது சிறுமியை, கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், அவருக்கு மணிமாறன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி அளித்த தகவலின் பேரில், அவரது பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்
Nov 13, 2020, 16:08 IST
வேலூர்
வேலூரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய உறவினரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர். வேலூர் வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(38). இவர் அதேபகுதியை சேர்ந்த தங்கை முறையிலான 15 வயது சிறுமியை, கட்டாயப்படுத்தி பாலியல்
வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், அவருக்கு மணிமாறன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி அளித்த தகவலின் பேரில், அவரது பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் மணிமாறன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.