×

இரு குழந்தைகளுக்கு கொசு மருந்தை கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி

வேலூரில் கணவர் இறந்த சோகத்தில் 2 குழந்தைகளுடன் தாய், கொசுமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நரேஷ்(33) என்பவர் கடந்த ஒரு மாதத்திர்க்கு முன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் மனமுடைந்த நரேஷின் மனைவி கோமதி, தனது 2 குழந்தைகளுக்கும் ஆலவ்ட் கொசுவிரட்டியை கொடுத்துவிட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மூவரையும் உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் 3-வயது குழந்தை ரியாஸ்ரீ பரிதாபமாக
 

வேலூரில் கணவர் இறந்த சோகத்தில் 2 குழந்தைகளுடன் தாய், கொசுமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நரேஷ்(33) என்பவர் கடந்த ஒரு மாதத்திர்க்கு முன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த நரேஷின் மனைவி கோமதி, தனது 2 குழந்தைகளுக்கும் ஆலவ்ட் கொசுவிரட்டியை கொடுத்துவிட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மூவரையும் உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் 3-வயது குழந்தை ரியாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தது. கோமதி மற்றும் அவரது 5 வயது மகன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை தொடர்பாக கோமதி எழுதிய கடிதத்தை கைபற்றி வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.