×

வீட்டில் கேஸை திறந்துவிட்டு போராட்டம் நடத்திய இளைஞரால் பரபரப்பு…

தூத்துக்குடி தூத்துக்குடியில் குடும்ப தகராறில் கேஸை திறந்துவிட்டு வீட்டிற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்பு சித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜேம்ஸ் – சித்ரா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
 

தூத்துக்குடி

தூத்துக்குடியில் குடும்ப தகராறில் கேஸை திறந்துவிட்டு வீட்டிற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்பு சித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜேம்ஸ் – சித்ரா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஜேம்ஸ், சித்ராவை வெளியேற்றி விட்டு, கதவை உள்பக்கமாக பூட்டிகொண்டார். பின்னர் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்துவிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அழைத்தும் அவர் கதவை திறக்காததால், இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தார். இதனை அடுத்து, அவருக்கு போலீசார் அறிவுரை கூறிவிட்டு கலைந்து சென்றனர். இரவில் நடந்த இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.