×

தண்ணீர் டேங்க் தவறி விழுந்ததில், கூலி தொழிலாளி பலி!

தூத்துக்குடி தூத்துக்குடி அருகே கடல்நீர் நிரப்பி கொண்டிருந்தபோது, டேங்க் தவறி விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த பெரியதாழை பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் அதே பகுதியில் மீன் விற்பனை செய்யும் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று மாலை நிறுவனத்திற்கு சின்டென்க்ஸ் டேங்குகளில் தண்ணீர் எடுப்பதற்காக மினிவேனில் கடற்கரை பகுதிக்கு சென்றிருந்தார். பின்னர், வாகனத்தில் இருந்த டேங்குகளுக்கு கடலில் இருந்து தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக டேங்க் தவறி
 

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே கடல்நீர் நிரப்பி கொண்டிருந்தபோது, டேங்க் தவறி விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த பெரியதாழை பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் அதே பகுதியில் மீன் விற்பனை செய்யும் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று மாலை நிறுவனத்திற்கு சின்டென்க்ஸ் டேங்குகளில் தண்ணீர் எடுப்பதற்காக மினிவேனில் கடற்கரை பகுதிக்கு சென்றிருந்தார்.

பின்னர், வாகனத்தில் இருந்த டேங்குகளுக்கு கடலில் இருந்து தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக டேங்க் தவறி கீழே நின்றிருந்த ஜெக்குமாரின் மீது விழுந்தது. இதில், தலை நசுங்கி சம்பவம் இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.