×

சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா… திரளான மக்கள் பங்கேற்பு…

தூத்துக்குடி தூத்துக்குடி சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நடைபெற்ற சப்பர பவனியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். தூத்துக்குடி மறை மாவட்டத்திற்கு உட்பட்ட தாளமுத்து நகர் பங்கில் அமைந்து உள்ள சிலுவைப்பட்டியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கி குடியரசு தினத்தன்று சப்பர பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 14ஆம் தேதி முதல் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி நேற்று
 

தூத்துக்குடி

தூத்துக்குடி சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நடைபெற்ற சப்பர பவனியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மறை மாவட்டத்திற்கு உட்பட்ட தாளமுத்து நகர் பங்கில் அமைந்து உள்ள சிலுவைப்பட்டியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கி குடியரசு தினத்தன்று சப்பர பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 14ஆம் தேதி முதல் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, தாளமுத்து நகர் பங்கு தந்தை மைக்கேல் ஸ்டீபன் ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் புனித அந்தோணியார் உள்ளிட்டோர் பவனி வந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டு, வழிபட்டு சென்றனர்.