×

கொள்ளையன் பறித்துச்சென்ற 17 சவரன் நகையை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்!

தூத்துக்குடி தூத்துக்குடியில் சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் கொள்ளையன் பறித்துச்சென்ற 17 சவரன் நகையை மீட்ட போலீசார், அதனை உரியவரிடம் ஒப்படைத்தார். தூத்துக்குடி ரோச் காலனியை சேர்ந்த ரீகாந்த் என்பவரது மனைவி ஆஷா (30). இவர் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வானத்தில் வந்த மர்மநபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 17 சவரன் நகையை பறித்துச் சென்றார். இதுகுறித்து ஆஷா அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம்
 

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் கொள்ளையன் பறித்துச்சென்ற 17 சவரன் நகையை மீட்ட போலீசார், அதனை உரியவரிடம் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி ரோச் காலனியை சேர்ந்த ரீகாந்த் என்பவரது மனைவி ஆஷா (30). இவர் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வானத்தில் வந்த மர்மநபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 17 சவரன் நகையை பறித்துச் சென்றார். இதுகுறித்து ஆஷா அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து, கொள்ளையனை பிடிக்க தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து, மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில், வழிப்பறி நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி, தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், முத்தையாபுரம் குமாரசாமி நகரை சேர்ந்த நயினார் (21), என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர்ந்து, நயினாரை கைதுசெய்த தனிப்படை போலீசார், அவரிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 17 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பறிமுதலான நகையை நேற்று தென்பாகம் காவல் நிலையத்தில், மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார், உரிமையாளர் ஆஷாவிடம் நேரில் வழங்கினார்.