×

மகள் திருமணத்திற்கு துணைபோன மனைவி… ஆத்திரத்தில் எரித்துக் கொன்ற ரவுடி…

தூத்துக்குடி தூத்துக்குடியில் மகளின் திருமணத்திற்கு ஆதரவாக இருந்ததால், மனைவியை வெட்டிக் கொன்று உடலை எரித்த ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அடுத்த தெற்கு கல்மேடு – துரைசாமிபுரம் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் நேற்று உடல் எரிந்த நிலையில் பெண் சடலம் கிடந்தது. இதுகுறித்து, தகவலின் பேரில் விளாத்திக்குளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய தருவைகுளம்
 

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மகளின் திருமணத்திற்கு ஆதரவாக இருந்ததால், மனைவியை வெட்டிக் கொன்று உடலை எரித்த ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அடுத்த தெற்கு கல்மேடு – துரைசாமிபுரம் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் நேற்று உடல் எரிந்த நிலையில் பெண் சடலம் கிடந்தது. இதுகுறித்து, தகவலின் பேரில் விளாத்திக்குளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய தருவைகுளம் போலீசார், இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

போலீசாரின் விசாரணையில், உயிரிழந்த பெண், தூத்துக்குடி நடராஜபுரத்தை சேர்ந்த முனியசாமி என்பவரது மனைவி முருகலட்சுமி (40) என தெரியவந்தது. பிரபல ரவுடியான முனியசாமியின் மூத்த மகளுக்கு சில நாட்களுக்கு முன், நெல்லையை சேர்ந்த இளைஞருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் முனியசாமிக்கு விருப்பமில்லாத நிலையில், முருகலட்சுமி மகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து, நேற்று முன்தினம் இரவு தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முனியசாமி, முருகலட்சுமியை அரிவாளால் வெட்டி கொலை செய்து, பின்னர், சடலத்தை காட்டுப்பகுதியில் வைத்து எரித்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, தப்பியோடிய முனியசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.