×

தூத்துக்குடி காப்பகத்தில் மாயமான மூதாட்டி, ஓடையில் சடலமாக மீட்பு!

தூத்துக்குடி தூத்துக்குடியில் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து மாயமான மூதாட்டி உப்பல ஓடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள பெண்கள் கல்லூரியின் பின்புறம் உப்பல ஓடையில், நேற்று காலை அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி
 

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து மாயமான மூதாட்டி உப்பல ஓடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள பெண்கள் கல்லூரியின் பின்புறம் உப்பல ஓடையில், நேற்று காலை அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் தூத்துக்குடி முதல் ரயில்வே கேட் பகுதியை சேர்ந்த சங்கர்வேல் என்பவரது மனைவி கோமதி (60) என்பது தெரியவந்தது. கால்டுவெல் காலனியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் வசித்து வந்த கோமதி கடந்த 26ஆம் தேதி அங்கிருந்து மாயமாகி உள்ளார்.

இதுதொடர்பாக காப்பக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் மூதாட்டியை தேடி வந்த நிலையில், அவர் உப்பாற்றில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.