×

கயத்தாறு அருகே உரிய ஆவணமில்லாத ரூ.3.5 லட்சம் பறிமுதல்!

தூத்துக்குடி கயத்தாறு அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கயத்தாறு பகுதியில் உள்ள சோதனை சாவடியில், நேற்று பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக நெல்லை – மதுரை நெடுஞ்சாலையில் வந்த இருசக்கர வாகனத்தை மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனையில் வாகனத்தில் 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச்
 

தூத்துக்குடி

கயத்தாறு அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கயத்தாறு பகுதியில் உள்ள சோதனை சாவடியில், நேற்று பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக நெல்லை – மதுரை நெடுஞ்சாலையில் வந்த இருசக்கர வாகனத்தை மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இந்த சோதனையில் வாகனத்தில் 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வாகனத்தில் வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் கயத்தாறு அருகே உள்ள மேல இலந்தைகுளம் பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பதும், அவரிடம் பணத்திற்கு உரிய ஆணவங்கள் இல்லாததும் தெரியவந்தது.

இதனை அடுத்து, அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கோயில்பட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான அமுதாவிடம் ஒப்படைத்தனர்.