×

திருச்சியில் கொரோனாவில் இருந்து மீண்ட ஆயுதப்படை எஸ்.ஐ. பலி!

திருச்சி திருச்சி அருகே கொரோனா தொற்றில் இருந்து மீண்ட மாவட்ட ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஆலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர். இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் ஞானசேகரனுக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், தொற்று உறுதியானதால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமடைந்ததை தொடர்ந்து, கடந்த 19ஆம் தேதி வீடு
 

திருச்சி

திருச்சி அருகே கொரோனா தொற்றில் இருந்து மீண்ட மாவட்ட ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஆலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர். இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் ஞானசேகரனுக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், தொற்று உறுதியானதால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நோய் குணமடைந்ததை தொடர்ந்து, கடந்த 19ஆம் தேதி வீடு திரும்பிய அவர், மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். இந்த நிலையில், நேற்று அறையில் ஞானசேகரன் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ஞானசேகரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கொரோனாவில் இருந்து மீண்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திடீரென மரணமடைந்த சம்பவம், திருச்சி மாவட்ட காவல்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.