×

“மத்திய அரசை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அதிமுக அரசு” – சஞ்சய் தத்

திருச்சி மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தை கொண்டுவந்தாலும், அதனை அதிமுக அரசு கண்மூடித்தனமாக ஆதரிப்பதாக காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு விவசாயிகள் குறித்து எந்த கவலையும் இன்றி, பல்வேறு சட்டங்களை இயற்றி வருவதாகவும், இதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து
 

திருச்சி

மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தை கொண்டுவந்தாலும், அதனை அதிமுக அரசு கண்மூடித்தனமாக ஆதரிப்பதாக காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு விவசாயிகள் குறித்து எந்த கவலையும் இன்றி, பல்வேறு சட்டங்களை இயற்றி வருவதாகவும், இதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறினார். மேலும், விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களை கண்டித்து,தமிழகம்

முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார். கல்வி, இடஒதுக்கீடு என அனைத்து விதத்திலும் அதிமுக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருவதாக கூறிய சஞ்சய் தத்,
மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தை கொண்டுவந்தாலும், அதனை கண்மூடித்தனமாக அதிமுக அரசு ஆதரிப்பதாக தெரிவித்தார்.