×

போலீஸ் குடியிருப்பில், காவலர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி திருச்சி கே.கே.நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லால்குடி அருகேயுள்ள நத்தமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(27). கடந்த 2017 ஆம் ஆண்டு பயிற்சி முடித்த இவர், திருச்சி கே.கே.நகர் காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து
 

திருச்சி

திருச்சி கே.கே.நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லால்குடி அருகேயுள்ள நத்தமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(27).

கடந்த 2017 ஆம் ஆண்டு பயிற்சி முடித்த இவர், திருச்சி கே.கே.நகர் காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது காவலர் நவநீத கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


இதனையடுத்து, அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, நவநீத கிருஷ்ணன் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை செய்து வருகின்றனர்.