×

பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!

திருச்சி திருச்சி அருகே பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அடுத்த தாயனூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சன்னாசி. இவரது மகள் செல்வி (18). சில நாட்களுக்கு முன்பு சன்னாசி செல்வியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மயக்கமடைந்த செல்வியை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக
 

திருச்சி

திருச்சி அருகே பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அடுத்த தாயனூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சன்னாசி. இவரது மகள் செல்வி (18). சில நாட்களுக்கு முன்பு சன்னாசி செல்வியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் மயக்கமடைந்த செல்வியை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

தற்கொலை சம்பவம் குறித்து புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.