×

திருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது

திருச்சி துபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்ற பயணி நடவடிக்கையில் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து, பாலசுப்ரமணியை தனியாக
 

திருச்சி

துபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்ற பயணி நடவடிக்கையில் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனை அடுத்து, பாலசுப்ரமணியை தனியாக அழைத்துச் சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அவர் உடைகளுக்குள் மறைத்து தங்கத்தை கடத்திவந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரிடம் இருந்து சுமார் 40 லடசம் ரூபாய் மதிப்பிலான 799 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், தங்கத்தை கடத்திவந்த பாலசுப்ரமணியத்தை கைதுசெய்து, அவர் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் 40 லட்சம் ரூபாய் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.