×

நீதிமன்ற நடவடிக்கைகளை துவங்க கோரி வழக்கறிஞர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற நடவடிக்கைகளை துவங்கக்கோரி தஞ்சை மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று காரணமாக இதுவரை நீதிமன்றங்கள் செயல்படாமல் உள்ளன. இதனால், தஞ்சை மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்கள் பொதுபோக்குவரத்து உள்ளிட்டவை செயல்பட தொடங்கிய பின்னும் கோர்ட் நடவடிக்கைகள் கொரோனோவை காரணம் காட்டி செயல் படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக நீதிமன்ற நடவடிக்கைகளை துவங்க வேண்டும் மேலும் தமிழ்நாடு பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் மீது எந்தவித விசாரணையுமின்றி
 

நீதிமன்ற நடவடிக்கைகளை துவங்கக்கோரி தஞ்சை மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்று காரணமாக இதுவரை நீதிமன்றங்கள் செயல்படாமல் உள்ளன. இதனால், தஞ்சை மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்கள் பொதுபோக்குவரத்து உள்ளிட்டவை செயல்பட தொடங்கிய பின்னும் கோர்ட் நடவடிக்கைகள் கொரோனோவை காரணம் காட்டி செயல் படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக நீதிமன்ற நடவடிக்கைகளை துவங்க வேண்டும் மேலும் தமிழ்நாடு பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் மீது எந்தவித விசாரணையுமின்றி நடவடிக்கை எடுத்து தொழில் செய்ய தடை விதிப்பது குற்றமாகும். இதனை உடனடியாக நிறுத்தி தடை செய்யப்பட்ட வழக்கறிஞர்களுக்கு தொழில் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.