×

திருச்சி அருகே ஐடிஐ மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

திருச்சி திருச்சி அருகே தனியார் ஐடிஐ மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு அடுத்த மொராய்ஸ் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் விக்னேஷ்(17). இவர் திருச்சியில் உள்ள தனியார் ஐடிஐ-யில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், விக்னேஷ்வரன் தனது செல்போனிற்கு ப்ளூடூத் ஹெட்போன் வாங்கி தரும்படி தந்தையிடம் கேட்டு வந்துள்ளார். அதற்கு, பிரபாகரன் பின்னர் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இந்த நிலையில், விக்னேஷ்
 

திருச்சி

திருச்சி அருகே தனியார் ஐடிஐ மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு அடுத்த மொராய்ஸ் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் விக்னேஷ்(17). இவர் திருச்சியில் உள்ள தனியார் ஐடிஐ-யில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், விக்னேஷ்வரன் தனது செல்போனிற்கு ப்ளூடூத் ஹெட்போன் வாங்கி தரும்படி தந்தையிடம் கேட்டு வந்துள்ளார். அதற்கு, பிரபாகரன் பின்னர் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், விக்னேஷ் தந்தைக்கு தெரிவிக்காமல் ஆன்லைனில் ப்ளூடூத் ஹெட்போனை ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், தந்தை திட்டுவார் என அசசத்தில், ஆர்டரை கேன்சல் செய்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.