×

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிரிழப்பு!

திருச்சி முசிறியில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி தென்கள்ளர் தெருவை சேர்ந்தவர்கள் முத்துவீரன் (80) – ராமாமிர்தம் (78) தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வயது முதிர்வு காரணமாக அவதிப்பட்டு வந்த முத்துவீரனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. கணவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ராமாமிர்தம் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தார்.
 

திருச்சி

முசிறியில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி தென்கள்ளர் தெருவை சேர்ந்தவர்கள் முத்துவீரன் (80) – ராமாமிர்தம் (78) தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வயது முதிர்வு காரணமாக அவதிப்பட்டு வந்த முத்துவீரனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. கணவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ராமாமிர்தம் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தார். படுத்த படுக்கையாக இருந்த முத்துவீரன், மனைவியின் இறப்பை அறிந்து மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், ராமாமிர்தத்திற்கு உறவினர்கள் இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது, திடீரென முத்துவீரனும் உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இருவருக்கும் ஒன்றாக இறுதிச்சடங்கை மேற்கொண்டனர். மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.