×

திருச்சி சரக காவல்துறையின் மனிதவள மேம்பாட்டு நிகழ்ச்சி

காவதுறை பணியாளர்களின் அறிவு கல்வி மற்றும் திறன் அதிகரிக்கும் நோக்கில் திருச்சி சரக காவல்துறையின் மனிதவள மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், டிஐஜி ஆனி விஜயா பங்கேற்றார். திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா உத்தரவின்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) மணிகண்டன் ஆகியோரின் தலைமையில், திருச்சி சரக குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்களின் ஆலோசனைப்படி, மனித வள மேம்பாடு நிகழ்ச்சி திருச்சி
 

காவதுறை பணியாளர்களின் அறிவு கல்வி மற்றும் திறன் அதிகரிக்கும் நோக்கில் திருச்சி சரக காவல்துறையின் மனிதவள மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், டிஐஜி ஆனி விஜயா பங்கேற்றார்.

திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா உத்தரவின்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) மணிகண்டன் ஆகியோரின் தலைமையில், திருச்சி சரக குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்களின் ஆலோசனைப்படி, மனித வள மேம்பாடு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் காவலரை பணியமர்த்திய பிறகு அவருக்குப் பயிற்சி அளித்தல், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குதல், பணியாளரின் பணிகளுக்கு பயனளிக்கும் வளங்களை விநியோகித்தல் மற்றும் பிற வளர்ச்சி நடவடிக்கைகள் ஆகியவை குறித்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா கலந்துகொண்டு இது குறித்து சிறப்புரை ஆற்றினார்.