×

திருச்சியில் கருப்பு பூஞ்சை நோயால் மூதாட்டி உயிரிழப்பு

திருச்சி திருச்சி அரியமங்கலத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சி மாநரகாட்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாத்திமா பீவி (62). சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான இவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு இருந்த மூதாட்டி பாத்திமா பீவிக்கு சில நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் உறவினர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
 

திருச்சி

திருச்சி அரியமங்கலத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி மாநரகாட்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாத்திமா பீவி (62). சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான இவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு இருந்த மூதாட்டி பாத்திமா பீவிக்கு சில நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதனால் உறவினர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். திருச்சி மாவட்டத்தில் தற்போது வரை 30 பேருக்கு, கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.