×

கொசு வர்த்திகளை ஏந்தியபடி சிபிஎம் ஆர்ப்பாட்டம்;திருச்சியில் பரபரப்பு

கொசு வர்த்திகளை ஏந்தியபடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பாக நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகர் பகுதிகளான கிராப்பட்டி,எடமலைப்பட்டி புதூர்,ராமச்சந்திரா நகர்,கே.கே நகர் மற்றும் சில பகுதிகளில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளாலும், சாக்கடைகளை தூர்வாராததாலும், முறையாக குப்பைகளை அல்லாததாலும் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் வாழும் மக்கள் கொசுக்கடியால் மிக கடுமையாக பாதிக்கப்படுவதால் உடனடியாக அப்பகுதியின் சுகாதாரத்தை உறுதிபடுத்த, உடனடியாக சுத்தம் செய்து கொசு மருந்தை
 

கொசு வர்த்திகளை ஏந்தியபடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பாக நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாநகர் பகுதிகளான கிராப்பட்டி,எடமலைப்பட்டி புதூர்,ராமச்சந்திரா நகர்,கே.கே நகர் மற்றும் சில பகுதிகளில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளாலும், சாக்கடைகளை தூர்வாராததாலும், முறையாக குப்பைகளை அல்லாததாலும் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதியில் வாழும் மக்கள் கொசுக்கடியால் மிக கடுமையாக பாதிக்கப்படுவதால் உடனடியாக அப்பகுதியின் சுகாதாரத்தை உறுதிபடுத்த, உடனடியாக சுத்தம் செய்து கொசு மருந்தை அடிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சி மாநகராட்சி
அலுவலகம் முன்பாக கொசுவர்த்தியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், உடனடியாக அப்பகுதிகளில் வாழும் மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனுவையும் அளித்தனர்.