×

‘தண்டவாளத்தில் கிடந்த சடலம்’ மர்மமான முறையில் இளைஞர் மரணம்; போலீசார் விசாரணை!

முக்கொம்பு அருகே ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த சடலம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்திருக்கிறது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த இளைஞர் யார் என்பது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சடலமாக கிடந்தவர் கரூர் மாவட்டம் குளித்தலை
 

முக்கொம்பு அருகே ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த சடலம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்திருக்கிறது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அந்த இளைஞர் யார் என்பது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சடலமாக கிடந்தவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள பொய்யாமொழி கிராமத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (25) என்றும் அவர் கட்டுமானத் தொழில் செய்து வந்தார் என்றும் தெரிய வந்தது.

தண்டவாளத்தில் இளைஞர் விக்னேஸ்வரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விக்னேஸ்வரன் கொலை செய்யப்பட்டு சடலமாக தண்டவாளத்தில் வீசப்பட்டாரா? அல்லது தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே, விக்னேஸ்வரன் மரணத்தை அறிந்த உறவினர்கள், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறி திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.