×

திருச்சி மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 55.25% வாக்குப்பதிவு!

திருச்சி திருச்சி மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 55.25 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 55.25 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதன்படி, மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மணச்சநல்லூரில் 60.72 சதவீதமும், அடுத்தபடியாக லால்குடியில் 59.24 சதவீதமும் வாக்குப்பதிவாகி உள்ளது.
 

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 55.25 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 55.25 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

இதன்படி, மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மணச்சநல்லூரில் 60.72 சதவீதமும், அடுத்தபடியாக லால்குடியில் 59.24 சதவீதமும் வாக்குப்பதிவாகி உள்ளது. துறையூர் (தனி) தொகுதியில் 56.80 சதவீதமும், ஶ்ரீரங்கம் தொகுதியில் 56.25 சதவீதமும், முசிறி தொகுதியில் 55.51 சதவீதமும் வாக்குப்பதிவாகி உள்ளது.

மணப்பாறையில் 53.89 சதவீதமும், திருச்சி மேற்கில் 53 சதவீதமும், திருவெறும்பூரில் 52.54 சதவீதமும் வாக்குகள் பதிவான நிலையில், மாவட்டத்திலேயே குறைந்தபட்சமாக திருச்சி கிழக்கில் 50.83 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.