×

கொள்ளிடம் மணல் திருட்டில் 2 பேர் கைது! ஸ்ரீரங்கம் போலீசார் நடவடிக்கை

திருச்சி மாவட்டம் காவிரி கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் இரவு நேரத்தில் அதிக அளவில் மணல் திருட்டு நடப்பதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் மினி லாரி வைத்து மணல் திருடுவதாக ஸ்ரீரங்கம் தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் சோதனை சோதனை செய்தபோது மினி லாரியில் மணல் திருடி கொண்டு இருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை செய்தபோது ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியைச்
 

திருச்சி மாவட்டம் காவிரி கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் இரவு நேரத்தில் அதிக அளவில் மணல் திருட்டு நடப்பதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் மினி லாரி வைத்து மணல் திருடுவதாக ஸ்ரீரங்கம் தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் சோதனை சோதனை செய்தபோது மினி லாரியில் மணல் திருடி கொண்டு இருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை செய்தபோது ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியைச் சேர்ந்த அஜித் மற்றும் ராஜசேகர் என்பது தெரியவந்தது.

இருவரும் கடந்த சில நாட்களாகவே கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக தெரியவந்ததை அடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.