×

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இளைஞர் பலி!

திருச்சி திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயி. இவரது மகன் மருதுபாண்டி (19). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு சிறுகளப்பூரில் இருந்து புள்ளம்பாடிக்கு இருசக்க வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்திற்குள்ளனாது. இந்த விபத்தில் மருதுபாண்டி மற்றும் மற்றொரு வாகனத்தில வந்த வரகுப்பை பகுதியை
 

திருச்சி

திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயி. இவரது மகன் மருதுபாண்டி (19). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு சிறுகளப்பூரில் இருந்து புள்ளம்பாடிக்கு இருசக்க வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்திற்குள்ளனாது. இந்த விபத்தில் மருதுபாண்டி மற்றும் மற்றொரு வாகனத்தில வந்த வரகுப்பை பகுதியை சேர்ந்த பிரசாந்த (23) மற்றும் செந்தில் முருகன்(20) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே மருதுபாண்டி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.