×

திருச்சி: டூவீலர் திருடன் சிக்கினான்! 17 பைக்குகள் பறிமுதல்!

இருசக்கர வாகன திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு மாநகர் முழுவதும் குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் தனிப்படையினர் திருவானைக்கோவில் அருகில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்றார். அவரை பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக தகவல் பேசியதை அடுத்து கே.கே.நகர், காந்திநகர், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சரவணகுமார், ஸ்ரீரங்கம், தில்லைநகர், அரசு மருத்துவமனை, கோட்டை ஆகிய காவல்
 

இருசக்கர வாகன திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு மாநகர் முழுவதும் குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தனிப்படையினர் திருவானைக்கோவில் அருகில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்றார். அவரை பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக தகவல் பேசியதை அடுத்து கே.கே.நகர், காந்திநகர், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சரவணகுமார், ஸ்ரீரங்கம், தில்லைநகர், அரசு மருத்துவமனை, கோட்டை ஆகிய காவல் நிலைய எல்லைக்குள் 17 இருசக்கர வாகனங்கள் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து இதனால் சரவணகுமாரை கைது செய்து அவனிடமிருந்த ரூ.4.86 மதிப்புள்ள 17 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இருசக்கர வாகன திருடனை கைது செய்து 17 வாகனங்களை மீட்ட தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டினார்.