×

வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் 15 சவரன் நகைகள் கொள்ளை!

திருச்சி திருவெறும்பூர் அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீடடின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 15 சவரன் தங்க நகைகள் திருடி சென்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள வேங்கூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் அரியமங்கலம் பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை காளிதாஸ் வழக்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு பட்டறைக்கு புறப்பட்டு சென்றார். பிற்பகலில், மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை
 

திருச்சி

திருவெறும்பூர் அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீடடின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 15 சவரன் தங்க நகைகள் திருடி சென்றனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள வேங்கூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் அரியமங்கலம் பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை காளிதாஸ் வழக்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு பட்டறைக்கு புறப்பட்டு சென்றார்.

பிற்பகலில், மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதனுள் இருந்த 15 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறிதது காளிதாஸ் அளித்த தகவலின் பேரில், திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.