×

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி!

திருப்பத்தூர் காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கொல்லைமேடு பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மகன் வல்லரசு(24). இவர் கேரள மாநிலத்தில் கூலி தொழிலாளி ஆக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கொரோனா காரணமாக சொந்த ஊரில் இருந்து வந்த அவர், மீண்டும் கேரளாவுக்கு செல்ல நேற்று காலை திருப்பத்தூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் சென்றார். அங்கு ரயிலில் ஏறிய
 

திருப்பத்தூர்

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கொல்லைமேடு பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மகன் வல்லரசு(24). இவர் கேரள மாநிலத்தில் கூலி தொழிலாளி ஆக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கொரோனா காரணமாக சொந்த ஊரில் இருந்து வந்த அவர், மீண்டும் கேரளாவுக்கு செல்ல நேற்று காலை திருப்பத்தூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் சென்றார்.

அங்கு ரயிலில் ஏறிய வல்லரசு படிக்கட்டின் அருகே நின்றவாறு பயணம் செய்ததாக கூறப்படுகிறது. காட்பாடி ரயில் நிலையத்தை கடந்து சிறிது தூரம் சென்றபோது எதிர்பாராத விதமாக படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வல்லரசு, ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.