×

கருத்து வேறுபாட்டால் விபரீதம்… காதலியின் கழுத்தை கத்தியால் வெட்டி விட்டு, இளைஞர் தற்கொலை!

திருப்பத்தூர் வாணியம்பாடியில் கருத்து வேறுபாடு காரணமாக காதலியை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு, இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மில்லத் நகரை சேர்ந்த ஜீவா என்பவரது மகன் சசி (26). கூலி தொழிலாளி. இவர் இதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி கோமதியை (18) காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் வழக்கமாக சந்திக்கும்
 

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் கருத்து வேறுபாடு காரணமாக காதலியை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு, இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மில்லத் நகரை சேர்ந்த ஜீவா என்பவரது மகன் சசி (26). கூலி தொழிலாளி. இவர் இதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி கோமதியை (18) காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் வழக்கமாக சந்திக்கும் மைதானத்தில் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோமதியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினார். இதில், கழுத்தில் 4 இடங்களில் வெட்டுக்காயமடைந்த கோமதி, அலறி துடித்தார். உயிருக்கு போராடிய கோமதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து கோமதியின் தந்தை புகாரின் பேரில் வாணியம்பாடி நகர போலீசார் சசியை கைதுசெய்ய அவரது வீட்டிற்கு சென்றனர்.

அப்போது, சசி வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். இதனையடுத்து, சசி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கோமதி மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.