×

திருப்பத்தூர் அருகே டிராக்டரில் மணல் கடத்தல்; ஓட்டுநர் தப்பியோட்டம்!

வாணியம்பாடி டிராக்டரில் மணல் கடத்திய ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கணவாய் புதூர் பகுதியில் மணல் அள்ளப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனியாருக்கு சொந்தமான அந்த இடத்தில் மணல் அள்ளி, வெளியே விற்கப்பட்டு வருவதாக வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியர் உத்தரவிட்டதன் பேரில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மணல்
 

வாணியம்பாடி டிராக்டரில் மணல் கடத்திய ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கணவாய் புதூர் பகுதியில் மணல் அள்ளப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனியாருக்கு சொந்தமான அந்த இடத்தில் மணல் அள்ளி, வெளியே விற்கப்பட்டு வருவதாக வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியர் உத்தரவிட்டதன் பேரில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மணல் கடத்திக் கொண்டு வந்த டிராக்டரை மடக்கி பிடித்தனர். போலீசார், டிராக்டர் ஓட்டுநரை பிடிப்பதற்குள்ளாக அவர் அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார். இதனையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவும் செய்திருக்கின்றனர்.