×

கணவர் இறந்த அதிர்ச்சியில் மூதாட்டி மயங்கி விழுந்து பலி!

திருப்பத்தூர் வாணியம்பாடியில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி ரோடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (78). இவர் அந்த பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமியம்மாள் (65). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை சைக்கிளில் சென்றபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர்,
 

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி ரோடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (78). இவர் அந்த பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமியம்மாள் (65). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை சைக்கிளில் சென்றபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவர், வீட்டில் இருந்த படி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் உயிரிழந்தார். கணவர் இறந்ததால் அதிர்ச்சியடைந்த லட்சுமியம்மாள், அண்ணாமலையின் உடலை கட்டியணைத்தவாறு அழுது கொண்டிருந்தார். அப்போது, திடீரென கணவர் உடல் மீது மயங்கி விழுந்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் தூக்கி பார்த்தபோது, லட்சுமியம்மாள் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இருவரது உடல்களையும் ஒன்றாக அடக்கம் செய்தனர். கணவர் இறந்த சில நிமிடங்களிலேயே மனைவியும் மயங்கி விழுந்து பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.