×

தனியார் ஏஜென்சி கதவை உடைத்து, ரூ.30 லட்சம் சிகரெட் பாக்கெட்டுகள் கொள்ளை

திருப்பத்தூர் திருப்பத்தூரில் தனியார் ஏஜென்சியின் கதவை உடைத்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் ஈத்கா சாலையில் தனியாருக்கு சொந்தமான ஐடிசி சிகரெட் நிறுவனத்தின் மொத்த விற்பனை குடோன் உள்ளது. நேற்று இரவு பணிமுடிந்து ஊழியர்கள் வழக்கம்போல் குடோனை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். தொடர்நது இன்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பின் பக்க கதவு உடைக்கப்பட்ட இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, உள்ளே சென்று
 

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தனியார் ஏஜென்சியின் கதவை உடைத்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் ஈத்கா சாலையில் தனியாருக்கு சொந்தமான ஐடிசி சிகரெட் நிறுவனத்தின் மொத்த விற்பனை குடோன் உள்ளது.

நேற்று இரவு பணிமுடிந்து ஊழியர்கள் வழக்கம்போல் குடோனை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். தொடர்நது இன்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பின் பக்க கதவு உடைக்கப்பட்ட இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, உள்ளே சென்று பார்த்தபோது விற்பனைக்காக பெட்டிகளில் அடுக்கிவைத்திருந்த சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக அந்த நிறுவன அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கடையில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்த போது, நள்ளிரவில் ஆம்னி வேனில் வந்த 3 பேர் கும்பல், சிகரெட் பண்டல்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.