வடமாநில தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு
திருப்பத்தூர் ஆம்பூர் அருகே பஞ்சுமிட்டாய் விற்பனை செய்யும் வடமாநில தொழிலாளியை தாக்கிவிட்டு, மர்மநபர்கள் பணத்தை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அபுல். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, பஞ்சுமிட்டாய் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் வெளியூரில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்துவிட்டு நடராஜபுரம் திரும்பிய அபுலை, மர்மநபர்கள் சிலர் வழிமறித்து தாக்கியுள்ளனர். பின்னர், அவரது சட்டைப்பையில் இருந்த 3 ரூபாய் பணத்தை பறித்துகொண்டு, அவர்கள் தப்பியோடினர்.
Nov 12, 2020, 20:57 IST
திருப்பத்தூர்
ஆம்பூர் அருகே பஞ்சுமிட்டாய் விற்பனை செய்யும் வடமாநில தொழிலாளியை தாக்கிவிட்டு, மர்மநபர்கள் பணத்தை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அபுல். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, பஞ்சுமிட்டாய் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் வெளியூரில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்துவிட்டு நடராஜபுரம் திரும்பிய அபுலை, மர்மநபர்கள் சிலர் வழிமறித்து தாக்கியுள்ளனர். பின்னர், அவரது சட்டைப்பையில் இருந்த 3 ரூபாய் பணத்தை பறித்துகொண்டு, அவர்கள் தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த அபுலை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். வழிப்பறி சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.