×

ஆம்பூர் அருகே 85 வயதான முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை!

பனங்காட்டூர் பகுதியில் 85 வயதான முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பனங்காட்டூர் பகுதியில் வசித்து வந்த முதியவர் பஞ்சாட்சரம். இவருக்கு வயது 85. இந்த முதியவர் பனங்காட்டூர் பகுதியில் இருக்கும் சத்தியமூர்த்தி என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அந்த வழியே சென்ற பொதுமக்கள், கிணற்றில் இவரது சடலம் மிதந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உடனடியாக போலீசாருக்கு
 

பனங்காட்டூர் பகுதியில் 85 வயதான முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பனங்காட்டூர் பகுதியில் வசித்து வந்த முதியவர் பஞ்சாட்சரம். இவருக்கு வயது 85. இந்த முதியவர் பனங்காட்டூர் பகுதியில் இருக்கும் சத்தியமூர்த்தி என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அந்த வழியே சென்ற பொதுமக்கள், கிணற்றில் இவரது சடலம் மிதந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார், கிணற்றில் இருந்து முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த முதியவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த முழு விவரம் தெரிய வரவில்லை. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குடும்ப பிரச்னையால் முதியவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.