×

ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை!

திருவண்ணாமலை திருவண்ணாமலையில் ஓய்வுபெற்ற என்.எல்.சி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 60 சவரன் நகை மற்றும் ரூ.12 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். திருவண்ணாமலை வேங்கிகால் தென்றல் நகரில் வசித்து வருபவர் சிவானந்தம். ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியர். இவர் கடந்த 2 நாட்களுக்கு சேத்துப்பட்டு அருகே உள்ள தனது சொந்த கிராமத்திற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர்
 

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ஓய்வுபெற்ற என்.எல்.சி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 60 சவரன் நகை மற்றும் ரூ.12 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.

திருவண்ணாமலை வேங்கிகால் தென்றல் நகரில் வசித்து வருபவர் சிவானந்தம். ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியர். இவர் கடந்த 2 நாட்களுக்கு சேத்துப்பட்டு அருகே உள்ள தனது சொந்த கிராமத்திற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சிவானந்ததுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சிவானந்தம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து, சிவானந்தம் அளித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.