×

ஆரணி அருகே அதிமுக பிரமுகர் வீட்டிற்கு தீ வைப்பு… மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை…

திருவண்ணாமலை ஆரணி அருகே அதிமுக பிரமுகரின் பண்ணை வீட்டிற்கு மர்மநபர்கள் தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். அதிமுகவை சேர்ந்த இவர், முன்னாள் பஞ்சாயத்து தலைவராகவும், ஒன்றிய கவுன்சிலராகவும் பதவி வகித்து உள்ளார். மனோகரன் தற்போது ஆரணியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நடந்து முடிந்த ஆரணி சட்டமன்ற தொகுதி தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த நிலையில், நேற்று அதிகாலை முனுகப்பட்டில் உள்ள மனோகரனின்
 

திருவண்ணாமலை

ஆரணி அருகே அதிமுக பிரமுகரின் பண்ணை வீட்டிற்கு மர்மநபர்கள் தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். அதிமுகவை சேர்ந்த இவர், முன்னாள் பஞ்சாயத்து தலைவராகவும், ஒன்றிய கவுன்சிலராகவும் பதவி வகித்து உள்ளார். மனோகரன் தற்போது ஆரணியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நடந்து முடிந்த ஆரணி சட்டமன்ற தொகுதி தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த நிலையில், நேற்று அதிகாலை முனுகப்பட்டில் உள்ள மனோகரனின் பண்ணை வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்து பொருட்களுக்கும், இருசக்கர வாகனத்துக்கும் தீ வைத்துவிட்டு தப்பியோடினர். இந்த விபத்தில், வீட்டில் இருந்த கட்டில் மெத்தை, உடைகள் உள்ளிட்ட பொருட்களும் மற்றும் இருசக்கர வாகனமும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து, மனோகரன் அளித்த புகாரின் பேரில் பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பளர் வென்றுள்ள நிலையில், தேர்தல் முன் விரோதம் காரணமாக தீ வைப்பு சம்பவம் நடைபெற்றதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.