×

ஆட்டோ ஓட்டுநர் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் பலி!

திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுநர் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலி குப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ். இவரது மகன் அஸ்வின்குமார்(19). இவர் கல்லூரியில் பி.எஸ்.சி 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் உறவினர் செந்தாமரைக் கண்ணன் (33). அட்டோ ஓட்டுநர். இவர் கடந்த 1ஆம் தேதி, அஸ்வின்குமாரை கீழ்பென்னாத்தூருக்கு செல்ல அழைத்துள்ளார். அதற்கு அஸ்வின்குமார் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த செந்தாமரை
 

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுநர் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலி குப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ். இவரது மகன் அஸ்வின்குமார்(19). இவர் கல்லூரியில் பி.எஸ்.சி 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் உறவினர் செந்தாமரைக் கண்ணன் (33). அட்டோ ஓட்டுநர். இவர் கடந்த 1ஆம் தேதி, அஸ்வின்குமாரை கீழ்பென்னாத்தூருக்கு செல்ல அழைத்துள்ளார்.

அதற்கு அஸ்வின்குமார் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த செந்தாமரை கண்ணன் அஸ்வினை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த அஸ்வினை, உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுதொடர்பாக, கீழ்பென்னாத்தூர் போலீசார் செந்தாமரை கண்ணனை கைதுசெய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த அஸ்வின்குமார் நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து, கீழ்பென்னாத்தூர் போலீசார் கொலைக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.