×

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கார் ஓட்டுநர் கொலை

திருவள்ளூர் திருவள்ளூர் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கார் ஓட்டுநர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் அசோக் குமார்(28). இவரை நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர், தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இருவரும் மது அருந்திய போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில ஆத்திரமடைந்த சதீஷ், அசோக்குமாரின் விலா எலும்பு பகுதியில்
 

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கார் ஓட்டுநர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் அசோக் குமார்(28). இவரை நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர், தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இருவரும் மது அருந்திய போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில ஆத்திரமடைந்த சதீஷ், அசோக்குமாரின் விலா எலும்பு பகுதியில் குத்திவிட்டு தப்பியோடினார்.

அசோக்கின் அலறல் சத்தம் கேட்ட அந்த பகுதி மக்கள், அவரை உடனடியாக மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வெள்ளவேடு போலீசார், சதீஷின் தந்தை ராஜசேகரன், அவரது சகோதரன் முத்து ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பியோடிய கொலையாளி சதீஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.