×

திருவள்ளூரில் தனியார் குடோனில் பதுக்கிய ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரம் பறிமுதல்

திருவள்ளூர் திருவள்ளூர் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 10 டன் செம்மரக்கட்டைகளை, வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதாக, சென்னை வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சென்னை வன பாதுகாவலர் ஞானசேகர் தலைமையிலான குழுவினர், திருவள்ளூர் பகுதியில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் கிராமத்தில் தனியார் சேமிப்புக் கிடங்கில், செம்மரக் கட்டைகளை
 

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 10 டன் செம்மரக்கட்டைகளை, வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதாக, சென்னை வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சென்னை வன பாதுகாவலர் ஞானசேகர் தலைமையிலான குழுவினர், திருவள்ளூர் பகுதியில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் கிராமத்தில் தனியார் சேமிப்புக் கிடங்கில், செம்மரக் கட்டைகளை பதுக்கி, அவற்றை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்னை வன பாதுகாவர் சரவணன் தலைமையில் வனத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் குடோனில் பதுக்கிவைத்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 10 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

வனத்துறையினரின் விசாரணையில், செங்குன்றத்தை சேர்ந்த கதிரவன் என்பவர், குடோனை வாடகைக்கு எடுத்து செம்மரக்கட்டைகளை பதுக்கியது தெரியவந்தது. மேலும், அவர் மீது செம்மரக்கடத்தல் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து, பறிமுதல் செய்த செம்மரங்கள், திருவள்ளூர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, செம்மரக்கடத்தல் மன்னை கதிரவனை தேடி வருகின்றனர்.