காவலர் வீரவணக்க நாள் – எஸ்.பி. அரவிந்தன் அஞ்சலி
காவலர் வீரவணக்க நாளையொட்டி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அலுவலக வளாகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு எஸ்.பி. அரவிந்தன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியின் போது கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று உதவிய ஆயுதப்படை காவலர்களுக்கு கேடயம் வழங்கி எஸ்.பி. அரவிந்தன் பாராட்டினார்.
Oct 21, 2020, 15:43 IST
காவலர் வீரவணக்க நாளையொட்டி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அலுவலக வளாகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு எஸ்.பி. அரவிந்தன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியின் போது கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று உதவிய ஆயுதப்படை காவலர்களுக்கு கேடயம் வழங்கி எஸ்.பி. அரவிந்தன் பாராட்டினார்.