×

இருசக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், இளைஞர் உயிரிழப்பு

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் அடுத்த நாயுடுகுப்பத்தில் புதிதாக அரசு மதுபான கடை திறக்கப்பட்டு உள்ளது. இங்கு நேற்று இரவு ஏகுமதுரை பழங்குடியின குடியிருப்பைச் சேர்ந்த நரேஷ்(22), நரேந்தர் மற்றும விஜி ஆகியோர் மது அருந்தி உள்ளனர். பின்னர், தங்களது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஆரம்பாக்கம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வாகனம் சாலையோர பள்ளத்தில்
 

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் அடுத்த நாயுடுகுப்பத்தில் புதிதாக அரசு மதுபான கடை திறக்கப்பட்டு உள்ளது. இங்கு நேற்று இரவு ஏகுமதுரை பழங்குடியின குடியிருப்பைச் சேர்ந்த நரேஷ்(22), நரேந்தர் மற்றும விஜி ஆகியோர் மது அருந்தி உள்ளனர். பின்னர், தங்களது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஆரம்பாக்கம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், நரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த நாரேந்தர், விஜி ஆகியோரை அந்தபகுதி மக்கள் மீட்டு சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீசார், நரேஷின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.