×

பிறந்து சில மணிநேரமே ஆன பெண்சிசு கால்வாயில் வீச்சு… போலீசார் விசாரணை…

திருவள்ளூர் பொன்னேரி அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ளது திருவேங்கடபுரம் கிராமம். இங்குள்ள கழிவுநீர் கால்வயில் இன்று அதிகாலை மர்மநபர்கள் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை வீசி சென்றனர். குழந்தையின் கதறல் சத்தம் கேட்ட அந்த பகுதி மக்கள், சென்று பார்த்தபோது கால்வாயில் பச்சிளம் குழந்தை கிடந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் குழந்தையை
 

திருவள்ளூர்

பொன்னேரி அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ளது திருவேங்கடபுரம் கிராமம். இங்குள்ள கழிவுநீர் கால்வயில் இன்று அதிகாலை மர்மநபர்கள் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை வீசி சென்றனர். குழந்தையின் கதறல் சத்தம் கேட்ட அந்த பகுதி மக்கள், சென்று பார்த்தபோது கால்வாயில் பச்சிளம் குழந்தை கிடந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் குழந்தையை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவர்கள் குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளித்த நிலையில், அதன் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனை தொடந்து, குழந்தைக்கு தாய்ப் பால் வழங்கிய மருத்துவர்கள், அதனை அரசு காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து, புகாரின் பேரில் பொன்னேரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை வீசி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.