×

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், தொழிலாளி பலி

நெல்லை திசையன்விளை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த அழகப்பபுரம் கிராமத்தை சேர்ந்த கருப்பன் என்பவரது மகன் லட்சுணன் (35). இவர் அந்த பகுதியில் பட்டி அமைத்து ஆடு மேய்க்கும் தொழிளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இன்று காலை லட்சுமணன் இட்டமொழியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது திருச்செந்தூர் நோக்கி சென்ற சொகுசுக் கார்
 

நெல்லை

திசையன்விளை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த அழகப்பபுரம் கிராமத்தை சேர்ந்த கருப்பன் என்பவரது மகன் லட்சுணன் (35). இவர் அந்த பகுதியில் பட்டி அமைத்து ஆடு மேய்க்கும் தொழிளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இன்று காலை லட்சுமணன் இட்டமொழியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது திருச்செந்தூர் நோக்கி சென்ற சொகுசுக் கார் ஒன்று அதிவேகமாக மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த திசையன் விளை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுநரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.