×

நெல்லை அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை!

நெல்லை நெல்லை அருகே கணவர் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள தடியன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பாண்டீஸ்வரி (30) என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். முனியசாமி, மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால், குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் குடும்ப செலவிற்கு பணமின்றி பாண்டீஸ்வரி தவித்து வந்துள்ளார். மேலும், அவர்
 

நெல்லை

நெல்லை அருகே கணவர் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள தடியன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பாண்டீஸ்வரி (30) என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். முனியசாமி, மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால், குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் குடும்ப செலவிற்கு பணமின்றி பாண்டீஸ்வரி தவித்து வந்துள்ளார். மேலும், அவர் முனியசாமியை வேலைக்கு செல்லும்படியும் கூறியும் அவர் கேட்கவில்லை.

இதனால் கண்வன் -மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த பண்டீஸ்வரி நேற்று முன்தினம் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பாண்டீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.