×

கொரோனாவால் மனைவி மரணம்… வேதனையில் கணவர் தூக்கிட்டு தற்கொலை!

நெல்லை நெல்லை அருகே கொரோனா தொற்றால் மனைவி உயிரிழந்ததால், வேதனையில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமையா(69). விவசாயி. இவரது மனைவி வேலம்மாள். இவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, கடந்த மாதம் 18ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி இறந்ததால் ராமையா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். மேலும், சரிவர சாப்பிடாமலும், யாருடனும் பேசாமலும்
 

நெல்லை

நெல்லை அருகே கொரோனா தொற்றால் மனைவி உயிரிழந்ததால், வேதனையில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமையா(69). விவசாயி. இவரது மனைவி வேலம்மாள். இவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, கடந்த மாதம் 18ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மனைவி இறந்ததால் ராமையா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். மேலும், சரிவர சாப்பிடாமலும், யாருடனும் பேசாமலும் இருந்து வந்த ராமையாவுக்கு, உறவினர்கள் ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீசார், ராமையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருததுவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.