×

வாகன தவணை செலுத்த முடியாத வேதனையில், ஓட்டுநர் தற்கொலை!

நெல்லை திசையன்விளை அருகே வாகன தவணை கட்ட முடியாததால் மனமுடைந்த ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரிரெங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகன் முருகன். ஓட்டுநரான இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் தவணை முறையில் இருசக்கர வாகனத்தை வாங்கி உள்ளார். துவக்கத்தில் முறையாக தவணை செலுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக செலுத்த வில்லை என கூறப்படுகிறது. இதனால், தனது வாகனத்தை நிதி நிறுவனத்தினர் எடுத்துச்
 

நெல்லை

திசையன்விளை அருகே வாகன தவணை கட்ட முடியாததால் மனமுடைந்த ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரிரெங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகன் முருகன். ஓட்டுநரான இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் தவணை முறையில் இருசக்கர வாகனத்தை வாங்கி உள்ளார். துவக்கத்தில் முறையாக தவணை செலுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக செலுத்த வில்லை என கூறப்படுகிறது.

இதனால், தனது வாகனத்தை நிதி நிறுவனத்தினர் எடுத்துச் சென்று விடுவார்களோ? என மன வருத்தத்தில் முருகன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, முருகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு, நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் உயிரிழந்தார். இது குறித்து, திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.