×

நெல்லையில் கொரோனா அச்சத்தால் விஷம் குடித்த முதியவர் பலி!

நெல்லை நெல்லை அருகே கொரோனா அச்சம் காரணமாக விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் அபிஷேகபட்டி அருகேயுள்ள வெள்ளாளன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (70). விவசாயி. இவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த 18ஆம் தேதி அன்று அவருக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனை முடிவு வெளியாவதற்கு முன்பே தனக்கு கொரோனா ஏற்பட்டு விட்டது என அச்சமடைந்த ஆறுமுகம், வீட்டில் வைத்திருந்த பூச்சிமருந்தை
 

நெல்லை

நெல்லை அருகே கொரோனா அச்சம் காரணமாக விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் அபிஷேகபட்டி அருகேயுள்ள வெள்ளாளன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (70). விவசாயி. இவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த 18ஆம் தேதி அன்று அவருக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

பரிசோதனை முடிவு வெளியாவதற்கு முன்பே தனக்கு கொரோனா ஏற்பட்டு விட்டது என அச்சமடைந்த ஆறுமுகம், வீட்டில் வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார் கொண்டார். மயங்கிய நிலையில் கிடந்த ஆறுமுகத்தை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு பொது வார்டில் ஆறுமுகம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் அவர் கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.