×

ஈரோட்டில் சமுதாய வளைகாப்பு விழா... கர்ப்பிணிகளுக்கு சீர் பொருட்கள் வழங்கிய திருமகன் ஈவெரா எம்எல்ஏ!

 

ஈரோட்டில் நேற்று நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் சீர் பொருட்கள் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி வளர்ச்சி பணிகள் திட்டம்,  ஈரோடு நகர்புறம் போஷன் அபியான் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் சண்முகவடிவு தலைமை தாங்கினார். திருமகன் ஈவெரா எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி, அவர்களுக்கு சீர் வரிசைகள் வழங்கினார். 

இதைத் தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு கலவை சாதம் பரிமாறப்பட்டது. இதில், தக்காளி, காய்கறி சாதம், புளி சாதம், தயிர் சாதம், புதினா சாதம், தேங்காய் சாதம், சக்கரை பொங்கல் ஆகியவை பரிமாறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஈ.பி.ரவி, துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர் விஜய பாஸ்கர், கே.என். பாட்சா உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.